இவ் வருட கண்ணகி இலக்கிய விழா [2011] எதிர் வரும் 18ம், 19ம் திகதிகளில் மட்டு நகரில் நடைபெறவுள்ளது இனி வரும் வருடங்களில் வைகாசி மாதத்தில் கிழக்கிலங்கையில் பொருத்தமான இடங்களில் இவ் விழா நடைபெறும்.
இவ் விழாவின் நோக்கம் :
1. கிழக்கிலங்கையின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கண்ணகி இலக்கியங்களை வெளிக் கொணர்தல்.
2. கண்ணகி தொடர்பான பண்டைய தொன்மங்களை மீட்டுப்பார்த்தல்.
3. கண்ணகி தொடர்பான இலக்கியங்களை அறிமுகம் செய்து பரவலாக்குதல்.
4. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் குறிப்பாக கிழக்கிலங்கையிலும் நிலவும் கண்ணகி நம்பிக்கைகளுக்கிடையேயான பொதுமைகளை ஆராய்தலாகும்.
கண்ணகி இலக்கிய விழா இடம் பெறும் இடம் :
[ யூன் 18ம், 19ம் திகதிகளில் ]
மட்/ மகாஜனக் கல்லூரி
கலை அரங்கு
அரசடி
மட்டக்களப்பு.
மேலதிக தகவல்களூக்கு :
செயலாளர் - [ அ.அன்பழகன் குரூஸ் ]
[ துணையாசிரியர் - செங்கதிர் ]
கண்ணகி இலக்கிய விழாக் குழு
45A, பிரதான வீதி,
சின்ன ஊறணி,
மட்டக்களப்பு.
T.P.NO - 077-7492861
067-3650563
Email - kannahivizha@gmail.com
உங்களது மேலான அபிப்பிராயத்தையும் ஆலோசனையுடன் இவ் விழாவுக்கு பேராதரவு வழங்குவீர்கள் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம்.
கண்ணகி இலக்கிய விழாக் குழு
மட்டக்களப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக